Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை துர்க்கை அம்மனுக்கு ... ஆண்டாள் – ரங்கமன்னார் கோவில் தேரோட்டம்! ஆண்டாள் – ரங்கமன்னார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூடப்பட்டது சதுரகிரி மலைப்பாதை!
எழுத்தின் அளவு:
மூடப்பட்டது சதுரகிரி மலைப்பாதை!

பதிவு செய்த நாள்

19 ஆக
2015
11:08

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நடந்த ஆடி அமாவாசை விழா நேற்றுடன் முடிந்தது. மாலை 5மணியுடன் மலைப்பாதை மூடப்பட்டது.சதுரகிரி மலையில் மே மாதம் நடந்த வெள்ளப்பெருக்கு காரணமாக மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் சென்றுவர தலா மூன்று நாட்கள் வீதம் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆடி அமாவாசை விழா ஆக., 12ல் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. இதற்காக ஆக., 8 முதல் மலைப்பாதை திறக்கப்பட்டது. அன்று முதல் 11 நாட்களுக்கு அனுமதி வழங்கினர். இதை பயன்படுத்தி தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் மலைக்கு வந்தனர். கோயில் நிர்வாகமும் பக்தர்கள் வசதிக்காக 10 நாட்களுக்கு அமாவாசை வழிபாட்டை நடத்தியது. அமாவாசை பிறகும், பக்தர்களுக்காக சுவாமிகளுக்கு அமாவாசை அலங்காரம், பூஜைகளும் நேற்று (ஆக.,18) வரை நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு அர்த்தஜாம பூஜையுடன் பக்தர்களுக்கான தரிசனம் நிறைவடைந்து கோயில் நடையும் சாத்தப்பட்டது. இதற்கு முன்னதாக மலை அடிவாரமான தாணிப்பாறையில் மாலை 5 மணியுடன் மலைப்பாதை மூடப்பட்டது. அதன்பின் மலைக்கு செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. மலைக்கு சென்ற பக்தர்கள் கீழே இறங்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

கலெக்டர்களுக்கு சபாஷ்:
ஆடிஅமாவாசை விழாவில் நெரிசல், தகராறு, தண்ணீர் பற்றாக்குறை என ஏதாவது பிரச்னைகள் ஏற்படும். ஆனால் இம்முறை பிரச்னைகள் ஏதும் இன்றி சுமுகமாக விழா முடிவடைந்தது. கலெக்டர்கள் சுப்பிரமணியம்( மதுரை) ராஜாராமன்(விருதுநகர்) எஸ்.பி.,க்கள்விஜயேந்திரபிதாரி ( மதுரை) மகேஷ்வரன் (விருதுநகர்) ஆகியோருக்கு பக்தர்கள் இடையே பாராட்டு கிடைத்துள்ளது.இவர்கள் விழாவை நடத்துவதில் காட்டிய அக்கறை, அவர்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், அடிமட்ட பணியாளர்கள் வரை அனைவரையும் முழுமையாக ஒருங்கிணைத்து செயல்பட வைத்தது. இவர்கள் விழா நடைபெறுவதற்கு ஒருமாதத்திற்கு முன்பே கூட்டம் நடத்தி, அடிக்கடி தாணிப்பாறை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இதனால் பக்தர்கள் எக்குறைபாடும் இன்றி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar