பதிவு செய்த நாள்
19
ஆக
2015
12:08
திருத்தணி: படவேட்டம்மன் கோவிலில், ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. திருத்தணி நகராட்சியில் உள்ள மடம் கிராமத்தில், படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, நேற்று, ஜாத்திரை திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 7:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம், 12:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.