பதிவு செய்த நாள்
20
ஆக
2015
12:08
திருத்தணி: ஆவணி மாத பிறப்பை ஒட்டி, சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி, ம.பொ.சி., சாலையில், சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பிற்கும், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு, நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், ஐந்து கலசங்கள் வைத்து ஒரு யாகசாலை, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபட்டனர்.