Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ... எட்டியம்மன், மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்! எட்டியம்மன், மாரியம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,700 ஆண்டு திருச்சின்னம் வாத்தியம்: திண்டுக்கல் கோயிலில் ஒலிக்குது இசை!
எழுத்தின் அளவு:
1,700 ஆண்டு திருச்சின்னம் வாத்தியம்: திண்டுக்கல் கோயிலில் ஒலிக்குது இசை!

பதிவு செய்த நாள்

21 ஆக
2015
11:08

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் 1,700 ஆண்டுகால பழமை வாய்ந்த திருச்சின்னம் வாத்தியம் தினமும் ஊதப்படுகிறது. பழங்காலத்தில் வேட்டையின் போதும், கொள்ளையர்களிடம் இருந்து மக்களை காத்துகொள்ள ஊதும் கருவியை சூறைச்சின்னம் என்றும்; கோயில் விழாக்களில் ஊதும் கருவியை திருச்சின்னம் என்றும் கூறுவர். இவற்றின் சிறப்பு சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கருவி 1,700 ஆண்டுக்கு முற்பட்டது. இந்த வாத்தியங்களை தற்போது பயன்படுத்துவது அரிதாகி விட்டது.தற்போது ஒருசில சிவாலயங்களில் மட்டும் திருச்சின்னம் ஊதப்படுகிறது. இதனை பள்ளி எழுச்சி, பள்ளியறை, கும்பாபிஷேகம், சுவாமி வீதிஉலா போன்ற நிகழ்வுகளில் ஊதுகின்றனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் தினமும் இரவு 8:30 மணிக்கு பள்ளியறை பூஜையின் போது தென்தில்லை செந்தில்குமார் திருசின்னம் வாத்தியம் ஊதுகிறார். அவர் கூறியதாவது: கடந்த 2002 முதல் இவ்வாத்தியம் வாசிக்கிறேன். இந்த கருவி பழங்காலத்தில் தாமிரத்தால் செய்யப்பட்டிருந்தது. தற்போது வெண்கலத்தால் செய்யப் பட்டுள்ளது. உடல்திறன் உள்ளோர் மட்டுமே ஊத முடியும். திண்டுக்கல் மாவட்ட சிவனடியார் திருக்கூட்டத்தை துவங்கி சிவாலயங்களில் திருச்சின்னம், உடலை, பிரம்மதானம், நெடுந்தாரை,  குருந்தாரை, கொம்பு, துத்தேரி, சங்கு, சலங்கை போன்ற சிவகண வாத்தியங்களை வாசிக்கிறோம். இசைப்பதற்கு பணம் வாங்குவதில்லை. கடவுள் தொண்டாக செய்கிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar