Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எட்டியம்மன், மாரியம்மன் கோவில்களில் ... தேவகோட்டை கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம் தேவகோட்டை கருப்பண்ணசாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

21 ஆக
2015
11:08

உடுமலை : குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் மற்றும் ஸ்ரீராமபட்டிணம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. உடுமலை அருகே குறிஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள, ஆண்டாள் நாச்சியார் கோவிலில், ஏழேகால் அடி உயர தாமரை பீடத்தில், புதிதாக ஆண்டாள் நாச்சியார் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, ஆக.,18ம் தேதி காலை, திருவாசகம் முற்றோதலுடன் துவங்கியது. அன்று மாலை, விநாயகர் கோவிலில் இருந்து, புனித தீர்த்தம், முளைப்பாலிகை எடுத்து வரப்பட்டு, திருவிளக்கு வழிபாடு, புனிதநீர், விநாயகர், ஐம்பூதம், திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வேள்வி, மண் எடுத்தல், முளைப்பாலிகையிடுதல், காப்பணிவித்தல் நடந்தது.

நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மூர்த்திகளுக்கு காப்பு அணிவித்தல், நான்காம் கால வேள்வி நடந்தது. காலை, 7:30 முதல், 8:00 மணிக்குள், ஆண்டாள் நாச்சியாருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது; பேரூர் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தை சேர்ந்த சிவகணேசன் நடத்தி வைத்தார். காலை, 11:00 மணிக்கு, மகா அபிஷேகம், அலங்கார பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, ஆண்டாள் நாச்சியாருக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். சித்தி விநாயகர் கோவில் மடத்துக்குளம், கணியூர், ஸ்ரீராமபட்டிணத்தில் அமைந்துள்ள, சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் மாலை, விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. முளைப்பாரி பூஜை காப்பு கட்டுதல், வேதபாராயணம், திருமறை ஓதுதல், தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு, கணபதி யாகம், தீபாராதனையும், 7:30 மணிக்கு, சித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar