மானாமதுரை: கீழமேல்குடி அழகிய மீனாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 10 மணிக்கு அழகிய சுந்தர பட்டர், குமார் பட்டர் தலைமையில் சிவாச்சார்யார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர். காலை 10.05 மணிக்கு கோயில் கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.