பெண்ணாடம் : நாக பஞ்சமியையொட்டி, பெண்ணாடம் எல்லையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சப்த கன்னிகளுக்கு நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 8:00 மணியளவில் பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில், சப்த கன்னிகள் அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் தரிசனம் செய்தனர்.