Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் சினிமா சூட்டிங் நடத்த ... தன்வந்திரி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்! தன்வந்திரி பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் திருப்பூரில் 90 ஜோடிகளுக்கு திருமணம்!
எழுத்தின் அளவு:
சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் திருப்பூரில் 90 ஜோடிகளுக்கு திருமணம்!

பதிவு செய்த நாள்

22 ஆக
2015
11:08

திருப்பூர்: ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், திருப்பூரில் நேற்று நடந்த கோலாகலமான விழாவில், 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயிபாபா, 90வது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், 90 ஜோடிகளுக்கான இலவச திருமண விழா, வாலிபாளையம், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், சாயி பஜனுடன் விழா துவங்கியது. சிவன், பார்வதி, புட்டபர்த்தி சாயிபாபா படத்துக்கு, சிறப்பு அலங்காரம், பூஜை செய்விக்கப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, வேத விற்பன்னர்கள், மந்திரம் ஓதினர்.

காப்பு கட்டுதல், மாலை அணிவித்தலை தொடர்ந்து, நாதஸ்வரம், மேளம் முழங்க, 10:15 மணிக்கு, மங்கல நாண் பூட்டும் நிகழ்வு நடந்தது. ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் அகில இந்திய துணை தலைவர் ரமணி, மாநில தலைவர் வரதன், துணை தலைவர் சுரேஷ், திருப்பூர் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் உட்பட சத்ய சாயி நிறுவன நிர்வாகிகள், உறுப்பினர்கள், திரளானோர், மணமக்களை வாழ்த்தினர். மணமகள்களுக்கு மெட்டி, மணமகன்களுக்கு கைக்கடிகாரம், திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் பிரசாதத்துடன், வீட்டு உபயோக பொருட்கள் அடங்கிய, 27 வகையான சீர்வரிசையும் வழங்கப்பட்டன.மூன்று மாதம் முதல், பேறுகாலம் வரை, இலவச சிகிச்சை பெறும் வகையில், மணமகள்களுக்கு மருத்துவ அட்டை வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு, மங்கல பொருட்களுடன் கூடிய தாம்பூல பையும், மரக்கன்று வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூடலூர்; கூடலூரில், சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்திய ... மேலும்
 
temple news
சிவகங்கை; தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பழநியில், சந்திர கிரகணத்தை குறிக்கும், 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு ஒன்று ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar