Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் செப்., 5ல் கிருஷ்ண ஜெயந்தி: ... பிட்டுக்கு மண் சுமக்கும் சொக்கன்: மதுரை விழாக்கோலம்! பிட்டுக்கு மண் சுமக்கும் சொக்கன்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா!
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா!

பதிவு செய்த நாள்

25 ஆக
2015
04:08

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலை  புனிதப்படுத்துவதற்கான பவித்ர உற்ஸவ விழா விமரிசையாக நடந்தது.

இக்கோயிலில் கடந்த காலங்களில் ஆகம விதிகளை பின்பற்றாமல் சென்ற பக்தர்களாலும், பெண்களாலும் ஏற்பட்ட காரீய களங்கங்களை களையவும், கோயிலையும், தெய்வத்தையும் புனிதப்படுத்தவும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.   இதையொட்டி கோயில் துளசிமாடத்தில் இருந்து புனிதமண் எடுக்கப்பட்டு கோயில் மண்டபத்தில் யாகபூஜைகள் அமைக்கப்பட்டது.   காப்புக்கட்டு வைபவத்துடன் விழா துவங்கியது.   கோயில் சேவா சமிதி டிரஸ்ட் தலைவர் ராஜகோபால், செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் பாஸ்கரன், ராஜகோபால், நாகசுப்பு, சந்தானம் ஆகியோருக்கும்,  பட்டாச்சார்யார்களுக்கும் காப்பு கட்டப்பட்டது.   இதை தொடர்ந்து யாகபூஜைகள் துவங்கின.

 கடந்த வருடத்திற்கு 360 நாட்களையும் புனிதப்படுத்துவதற்காக  360 வகையான மந்திரங்களும், பூஜைகளும் செய்யப்பட்டது.   2ம் நாளும் யாகபூஜைகள் தொடர்ந்து நடந்தது.   3ம் நாள் நிகழ்வாக  காலையில் சேதுநாராயணப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய திருமஞ்சன வழிபாடு நடந்தது.  மாலையில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார்.  மீண்டும் வீடுதிரும்பிய சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர்.   இறுதியில் காப்புகள் கழற்றும் நிகழ்வுகளும், சாந்திபூஜையும் நடந்தது.   ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நரசிம்ம பட்டர் தலைமையிலான பட்டாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர்.   கோயில் சேவாசமிதி டிரஸ்ட் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar