Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமித் ஷா ... திருப்புத்தூர் அய்யனார் கோயில் யாகசாலை பூஜைகள் துவங்கின திருப்புத்தூர் அய்யனார் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா!
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா!

பதிவு செய்த நாள்

26 ஆக
2015
11:08

திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான, பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நேற்று நடந்தது. சிவபெருமானின் திருவிளையாடல்களில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி, அனைத்து உயிர்களிலும் இறைவன் வாழ்கிறான் என்பதை உணர்த்துவதாக குறிப்பிடப்படுகிறது. பாண்டிய நாட்டில் இருந்த பெரிய குளம் உடைந்தபோது, கரையை அடைக்க வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என, மன்னர் உத்தரவிடுகிறார். அங்கு, பிட்டு விற்கும் தொழில் செய்து வரும் மூதாட்டி, குளக்கரையை அடைக்க ஆள் இல்லாமல், வேதனை அடைந்து இறைவனை வேண்டுகிறார். வேலையாளாக உருவம் எடுத்து, அங்கு வரும் சிவபெருமான், பிட்டு கூலியாக உண்டு விட்டு, குளக்கரைக்கு செல்கிறார்; ஆனால், கரையை அடைக்காமல், துõங்கி ஓய்வு எடுக்கிறார். அங்கு வந்த  மன்னர் ஆத்திரமடைந்து, கையிலிருந்த பிரம்பால் அடிக்கிறார்;  மக்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் பிரம்பு அடி விழுகிறது. இத்திருவிழா, ஆவணி மாதம் நடந்ததாகவும், இதை பிட்டு திருவிழாவாக, சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில்,  வாணிய சமுதாயம் சார்பில், 63வது ஆண்டாக நேற்று நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து விசாலாட்சி அம்மனுடன் விஸ்வேஸ்வரர், சிறப்பு அலங்காரத்தில் குளத்தின் முன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் பிட்டுக்கு மண் சுமந்த படலத்தை விளக்கும் வகையில், ஒருவர் கூலியாளாகவும், ஓய்வு எடுப்பது போலவும், மன்னர் பிரம்பால் அடிக்கும் காட்சி, குளக்கரை அடைப்பது என, திருக்காட்சியை செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar