திருப்புத்தூர் அய்யனார் கோயில் யாகசாலை பூஜைகள் துவங்கின
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2015 11:08
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூரண புஷ்கலா சமேத குளங்கரை கூத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின. திருப்புத்தூர் பெரியகண்மாய் கரையில் திருப்புத்தூர்,தம்பிபட்டி, புதுப்பட்டிக் கிராமத்தினருக்கு பாத்தியப் பட்ட குளங்கரை காத்த அய்யனார் கோயிலுக்கு புனருத்தாரணம் செய்யப் பட்டு, திருப்பணி நடந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து திருத்தளிநாதர் கோயிலி லிருந்து சிவாச்சாரியார்கள் யாக சாலைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். நேற்று மாலை 4.35 மணிக்கு குன்றக்குடி திருநீலகண்ட நாயனார் மடாலயம் பாண்டிச்செல்வம் சிவாச் சாரியார் தலைமையில் 21 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை துவக்கினர். தொடர்ந்து இன்று காலை 7.20 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. நாளை காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெறும்.