பதிவு செய்த நாள்
26
ஆக
2015
12:08
உளுந்தூர்பேட்டை: எம்.குன்னத்தூர், சேந்தநாடு கிராமங்களிலுள்ள கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா எம்.குன்னத்தூர் அய்யனார் கோவில், சப்தகன்னிகள் சமேத மூங்கிலம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 19ம் தேதி காலை 7:00 மணிக்கு விநாயகா பூஜை, கணபதி ஹோமம், தீபாரதனையும், மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், இரவு 10:00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜைகள், 20ம் தேதி காலை 6:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து 10.30 மணிக்கு கடம் புறப்பாடும், ÷ காபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, சேந்தநாடு கிராம ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீகன்னிமார் சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யாக சாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜை, தீபாரதனையும், 20ம் தேதி 2ம் கால யாக சாலை பூஜைகள், ஹோமம், மாலை 6:00 மணிக்கு 3ம் கால யாக சாலை பூஜைகள், 21ம் தேதி காலை 5:00 மணிக்கு 4ம் கால யாக சாலை பூஜைகள், ஹோமம், நாடி சந்தானம், மஹாபூர்ணாஹூதி நடந்தது. அதனை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.