திருப்பாச்சூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில், திருப்பதி செல்லும் புறவழிச்சாலை ஓரம், விநாயகர் சதுர்த்திக்காக பலவகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியில், மேற்கு வங்க மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு, 2 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. சிலைகள், 1,500 முதல் 8,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.