பழநி: ஆவணி கார்த்திகையை முன்னிட்டு பழநி திரு ஆவினன்குடி கோயிலில் பகல் 12 மணிக்கு குழந்தைவேலாயுதசுவாமி, சனிபகவான், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் சாத்தி மகா தீபாராதனையும், மலைக்கோயிலில் ஞானதண்டாயுதபாணிக்கு அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது. திருமுருக பக்தசபா நிர்வாகிகள், உபயதாரர்கள் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.