கள்ளக்குறிச்சி: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, உறியடித் திருவிழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடந்தது. பெருமாள் கோவில்களில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் கொண்டாடப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் மற்றும் நவநீத கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடந்தது. கிருஷ்ண பகவானுக்கு அபிஷேக, ஆராதனை செய்தனர். நவநீத கிருஷ்ணன் கோவில் உற்சவர் சிலை அலங்கரித்து யானை மற்றும் குதிரை பரிவாரங்களுடன் ஊர்வலம் வந்தனர். சேவை, சாற்றுமுறை வைபவங்கள் நடத்தி பக்தர்கள் பெருமாள் கோவில் தெரு, கடைவீதி, கவரைத்தெரு ஆகிய பகுதிகளில் உறியடித்தனர். மந்தைவெளியில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. செண்டை மேள வாத்தியங்களும் இசைக்கப்பட்டது.