Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் உண்டியலை உடைத்து பணம் ... தசரா விழா: ரூ.89 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்! தசரா விழா: ரூ.89 லட்சத்துக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் வெள்ளத்தில் மாதா திருத்தேர் பவனி!
எழுத்தின் அளவு:
பக்தர்கள் வெள்ளத்தில் மாதா திருத்தேர் பவனி!

பதிவு செய்த நாள்

09 செப்
2015
11:09

பெங்களூரு:சிவாஜி நகர் துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு, மாதா திருத்தேர், மக்கள் வெள்ளத்தில் பவனி வந்தது.சிவாஜி நகர் துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழா, கடந்த, 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், செப்., 7ம் தேதி வரை, நவநாள் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. காலை, 5:30 மணியிலிருந்து, இரவு, 8:30 மணி வரை தமிழ், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில், சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன. தினமும் மாலை, 5:30 மணிக்கு, கொடிமேடையில் மறையுரைகள், அன்னையின் நற்கருணை ஆசிர் நடைபெற்றது.பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:30 முதல் மாலை, 5:00 மணி வரை, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை திருப்பலி நடத்தப்பட்டது. காலை, 8:00 மணிக்கு கன்னடத்திலும்; 9:00 மணிக்கு தமிழிலும், பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ், சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார்.

மாதா திருத்தேர், மாலை, 5:30 மணியளவில், ஆலயத்திலிருந்து பக்தர்கள் வெள்ளத்தில் கிளம்பியது. இதில், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்றனர். பேராயர் பெர்னார்ட் மோரஸ், திருத்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தேர் பவனியை துவக்கி வைத்தார். தேர், முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இந்த திருத்தேர், 9 டன் எடை கொண்டதாக அமைக்கப்பட்டது. திருத்தேரை துவக்கி வைத்து, பேராயர் பெர்னார்ட் மோரஸ் கூறுகையில், “பெண் குழந்தைகளை அழிப்பது அதிகரித்து வருகிறது; இது தவறு. பெண் குழந்தைகளை போற்றி பாதுகாக்க வேண்டும்,” என்றார்.தேர் பவனியை முன்னிட்டு, சிவாஜி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar