Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரே நாளில் 10 கோவில்களில் ... திருவள்ளூர் வீரராகவருக்கு திருமஞ்சனம்! திருவள்ளூர் வீரராகவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் கோவிலில் கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

பதிவு செய்த நாள்

10 செப்
2015
11:09

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது; ஆயிரக்கணக்கானபக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.வைணவ தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவில், கும்பாபிஷேகம் 2001ம் ஆண்டு நடந்தது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முழுமை பெற்றதையடுத்து, முதல்கட்டமாக தெற்கு மற்றும் கிழக்கு, ரெங்கா ரெங்கா வாயில் கோபுரங்கள் உட்பட 11 கோபுரங்களுக்கும், 43 உப சன்னதிகளுக்கும் நேற்று காலை கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.முதல் கால யாக சாலை பூஜைகள், கடந்த 7ம் தேதி இரவு 7:30 மணிக்கு துவங்கியது. இரண்டாம் கால யாக பூஜையின் போது செங்கமல நாச்சியார், பார்த்த சாரதி, வேணுகோபால ஸ்வாமி, ஹயக்கிரீவர் சன்னிதிகளில் புதிய செப்புக் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மூன்றாம் கால யாக பூஜையின் போது, முதல் கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெறும் அனைத்து சன்னிதிகளின் மூர்த்திகளுக்கும், கோபுரங்களுக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நடந்த நான்காம் கால யாக பூஜையில், பிரபந்த ஸேவை, திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளியெழுச்சி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அதிகாலை 5:15 மணிக்கு, வேத கோஷங்களுடன் புனித நீர் நிரப்பப்பட்ட கடங்கள் புறப்பட்டன. காலை 6:30 மணிக்கு, 11 கோபுரங்களுக்கும், 43 உப சன்னிதிகளுக்கும் நரசிம்ம பட்டர் தலைமையிலான, 33 பட்டாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேகத்தை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தொடர்ந்து வேதசாற்று முறை, பிரபந்த சாற்று முறை, கோஷ்டி மரியாதை செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar