Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவருக்கு ... வேணுகோபால சாமி கோவில் கும்பாபிஷேக விழா! வேணுகோபால சாமி கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொர்ணகாளீஸ்வரருக்கு 17 ஆண்டுகளுக்குப்பின் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
சொர்ணகாளீஸ்வரருக்கு 17 ஆண்டுகளுக்குப்பின் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

10 செப்
2015
11:09

சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் நேற்று காலை 10:45 மணிக்கு சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். கருடன் 3 முறை வானத்தில் வட்டமிட, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் "ஓம் நமச்சிவாயா கோஷம் விண்ணை முட்ட கும்பாபிஷேகம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில்,நேற்று காலை 4:30 மணிக்கு 6வது காலயாகசாலை பூஜையும்,6:45 மணிக்கு பரிவார மூர்த்திகள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று காலை 10:10 மணிக்கு யாக சாலையில் இருந்து 37 கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் எடுத்து கோயிலுக்கு வந்தனர். அப்போது கருடன் ராஜகோபுரத்தை சுற்றி வானத்தில் 3 முறை வட்டமிட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் சிறிய ராஜகோபுரத்தில் 5 கலசம், பெரிய ராஜகோபுரத்தில் 9 கலசம் உட்பட 25 விமானத்தில் உள்ள 37 கலசங்களில் காலை 10:45 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின், மாலை 5 மணிக்கு மகாஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமின்றி பிற மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் வந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பக்தர்களின் வசதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆன்மிக எட்டாம் நாளான இன்று மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar