பெரியகுளம்:பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.பெரியகுளம் தென்கரையில் கவுமாரியம்மன் கோயில் திருவிழா ஜூலை 11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சந்தனம், பன்னீர் உட்பட பலவித அபிஷேகங்கள் நடந்தது. பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் சிம்மம், யானை, அன்னபட்ஷி, குதிரை வாகனங்களில் வீதி உலா வந்தார்.நேற்று மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலிருந்து தீச்சட்டி மற்றும் ஆயிரங்கண்பானை எடுத்து அம்மனை வழிபட்டனர்.செயல்அலுவலர் சுதா மற்றும் மண்டகப்படிதாரர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். டி.எஸ்.பி., உமா தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.