பதிவு செய்த நாள்
11
செப்
2015
11:09
பவானி: பவானி, அந்தியூர் ரோட்டில் உள்ள பண்டார அப்பிச்சி, மலையாள பகவதியம்மன் கோவில் பொங்கல் மற்றும் தேர்திருவிழா நடந்தது. கடந்த, 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை காடையம்பட்டி மடப்பள்ளியில் இருந்து, பண்டார அப்பிச்சு ஸ்வாமி தேர் பவனி புறப்பட்டு, கோவிலை அடைந்தது. பின், கோவிலில் கன்னிமார்களுக்கு சிறப்பு பூஜை செய்து, பவானி ஆற்றில் முதலைக்கு சாதம் வைக்கப்பட்டது. மதியம் பொங்கல் வைத்தலும், அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9 மணிக்கு பெரும் பூஜை, வாத்தியம் முழங்க, வாணவேடிக்கையுடன், காடையம்பட்டியில் உள்ள மடப்பள்ளியை, ஸ்வாமி சென்று அடையும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.