கமுதி: கமுதி, பேரையூர் கள்ளிக்குளத்தில் உள்ள கள்ளிலுடைய அய்யனார் கோயிலில், இரண்டாம் ஆண்டு வருடாபிஷேகம், ஒன்றிய கவுன்சிலர் முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது. ஆறு கால யாக பூஜைகளுடன், கோமாதா பூஜை, அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் கிராம தலைவர்கள் லிங்கதுரை, பெருமாள், செயலாளர்கள் சுப்பிரமணியன், வீரசிங்கம் பங்கேற்றனர்.