கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, கிட்டம்பட்டி மாரியம்மன் கோவில் விழாவையொட்டி நடந்த எருது விடும் விழாவை, ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். கிருஷ்ணகிரி அடுத்த, கிட்டம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா, கடந்த, ஆறு நாட்களுக்கு முன், கூழ் ஊற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும், காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் கோலாட்டம் நடந்தது. நேற்று மதியம் கோவில் வளாகத்தில் எருது விடும் விழா நடந்தது. இதற்காக, வளர்க்கப்பட்ட, ஒன்பது எருதுகள் கோவில் திடலில் விடப்பட்டது. இதை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.