பதிவு செய்த நாள்
21
ஜூலை
2011
12:07
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, 25ம் தேதி நடைபெறுகிறது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சித்திரை, மாசி கிருத்திகையையடுத்து விசேஷமாக கொண்டாடுவது ஆடிக்கிருத்திகை. இந்தாண்டு ஆடிக்கிருத்திகை விழா 25ம் தேதி நடைபெறுகிறது.விழாவையொட்டி, 24ம் தேதி இரவு 7 மணிக்கு, மூலவருக்கு விசேஷ அபிஷேகமும், 25ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசேஷ அபிஷேகமும் நடைபெறுகிறது.மாலை 5 மணிக்கு உற்சவருக்கு மகா அபிஷேகம், இரவு தங்க மயில் வாகனத்தில் வள்ளி தெய்வயானையுடன் வீதியுலா நடைபெறுகிறது. விழாவையொட்டி, அன்னதானம் மற்றும் காவடி ஊர்வலங்களை பல்வேறு சபையினர் நடத்துகின்றனர். வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலில், 24ம் தேதி இரவு பரணி விழாவையொட்டி, 8 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 10 மணிக்கு பரணி அபிஷேகமும், 12 மணிக்கு விபூதி காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. 25ம் தேதி ஆடிக்கிருத்திகையையொட்டி, காலை 5.30 மணிக்கு மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், மாலை 3 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம், இரவு 9 மணிக்கு கோடை ஆண்டவர் வீதியுலா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் வேதமூர்த்தி மற்றும் கந்தசஷ்டி விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.