Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளையார்கோவில் அம்மன் நகை மீட்பு! கோயம்புத்தூர் யோக விநாயகர் கோயிலில் முப்பெரும் விழா! கோயம்புத்தூர் யோக விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவளாபுரி அம்மன் கோவில்!
எழுத்தின் அளவு:
சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவளாபுரி அம்மன் கோவில்!

பதிவு செய்த நாள்

14 செப்
2015
02:09

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரியில், பழமை வாய்ந்த சிவளாபுரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக, ஆராய்ச்சியாளர் சுந்தரம், வரலாற்று ஆர்வலர் ஜெயசங்கர் கூறினர். அவர்கள் கூறியதாவது: அவிநாசி வட்டாரத்தில், சோழ மன்னர்களால் ஏறத்தாழ, 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, ஐந்து கோவில்களில், சிவளாபுரி அம்மன் கோவிலும் ஒன்று. கோவிலில், மூன்று கல்வெட்டுகள் உள்ளன. கதவில், பித்தளை தகடு பதிக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் பதிக்கப்பட்ட கல்வெட்டு, கலியுக ஆண்டு, 4992 (விக்ருதி ஆண்டு) பங்குனி, 4ம் தேதி என, பொறிக்கப்பட்டுள்ளது.

கொறட்டு வாசல் கதவில், இரண்டாவது கல்வெட்டில், பித்தளை தகட்டிலான எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கல்வெட்டு, கோவில் முன்புற மண்டபத்தின், பலகை கல்வெட்டாக காணப்படுகிறது. பல நுாறு ஆண்டுகள் ஆனதாலும், உரிய பராமரிப்பு இல்லாததாலும், எழுத்துக்கள் நன்றாக தெரியவில்லை. இருப்பினும், இது, சோழ மன்னர்களால் இக்கோவில், 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது என்ற வரலாற்றை தெரிவிக்கிறது.தவிர சிவளாபுரி அம்மனுக்கு தீர்த்தக்கிணறு வெட்டியது, மதில்சுவர் அமைத்து, திருப்பணிகள் செய்தவர்கள் குறித்தும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.’கல்வெட்டுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar