தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் கோவிலில் மாரியம்மன் சரித்திர பாரத சொற்பொழிவு நடந்தது. இரவில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. கடந்த 17ம் தேதி காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண நிகழ்ச்சியும், தொடர்ந்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் சிலையை தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்தனர். பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.