காரைக்கால்: காரைக்கால் ஆனந்த விநாயகர் திருக்கோவில் ஆவணி மாதத்தை முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை பெருவிழா நடந்தது. இதையொட்டி கணபதி பூஜைகளுடன், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காலவர் குழு தலைவர் குமரவேல், துணை தலைவர் கலிய பெருமாள், செயலாளர் பன்னீர்செல்வம் செய்திருந்தனர்.