ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க 2094 பேர் அடங்கிய 22வது யாத்திரிகர்கள் குழு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 4.55 மணிக்கு அமர்நாத் புறப்பட்டு சென்றது. பகவதி நகரில் இருந்து புறப்பட்டுச் சென்ற இக்குழுவில் 1298 ஆண்களும், 509 பெண்களும், 17 குழந்தைகளும், 270 சாதுக்களும் உள்ளனர். இதுவரை மொத்தம் 63,566 யாத்திரிகர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.