Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் ... திருத்தளிநாதர் கோயிலில் அன்னதானம் துவக்கம் திருத்தளிநாதர் கோயிலில் அன்னதானம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல்லில் ஆசிய மெகா விநாயகருக்கு கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
திண்டுக்கல்லில் ஆசிய மெகா விநாயகருக்கு கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

16 செப்
2015
11:09

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 115 டன்னுள்ள ஒரே கருங்கல்லில் உருவான, ஆசியாவிலேயே மிகப்பெரிய (32 அடி உயரம்) மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. திண்டுக்கல் கோபாலசமுத்திரம் மேற்குகரையில் 200 ஆண்டுகால பழமையான நன்மை தரும் விநாயகர் கோயில் இருந்தது. இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் மங்கள விநாயகர், அன்பு, மாணிக்கம், பால, கஜமுக, கருணை, ஆனந்த உள்ளிட்ட பெயர்களில் 108 விநாயகர் சிலைகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின் நன்மைதரும் 108 விநாயகர் கோயில் என, அழைக்கப்படுகிறது. அதே கோயில் வளாகத்தில் 2013 செப்டம்பரில் 115 டன்னுள்ள ஒரே கருங்கல்லில் ஆன 32 அடி உயர மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இது ஆசியாவிலே மிக பெரிய சிலை. இந்த சிலைக்கான கல் திருப்பூர் வெள்ளியம்பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. சிலை திருப்பூர் பூண்டி திருமுருகன் சிற்பக்கலை கூடத்தில் வடிவமைக்கப்பட்டது. சிலை பிரதிஷ்டைக்கு பின் கோயில் மகா மண்டபம் கட்டப்பட்டது. தற்போது இக்கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை 9:45 மணிக்கு நடக்கிறது. நிர்வாக அறங்காவலர் மருதநாயகம் கூறியதாவது: விநாயகர் சிலை உயரத்திற்கு தகுந்த 50 அடி மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. எங்குமில்லாத சிறப்பாக விநாயகரின் திருமுடியில் சிவன் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகருக்கு முன்பாக 4 டன்னுள்ள 5 அடி உயரம், 6 அடி நீள மூஞ்சூறு வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் சீனிவாச பெருமாள், அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன், மாரியம்மன், கருப்பணசாமி, மதுரைவீரன், கருமாரியம்மன் சன்னதிகள் உள்ளன. நன்மை தரும் விநாயகர் கருவறைக்கு முன் நவக்கிரகங்கள் உள்ளன, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar