Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரத்தில் திருக்கல்யாண ... வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்திக்கு தயாராகுது வேடசந்தூர் திருஷ்டி பூசணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2015
11:09

வேடசந்தூர்,:வேடசந்தூர் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கண்திருஷ்டிக்கான "திருஷ்டி பூசணிக்காய் அதிகளவு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விளைவிக்கப்படும் பூசணிக்காய்களில் ஒன்று சாம்பல் பூசணி எனப்படும் திருஷ்டி பூசணி. இதில் சாம்பார், அல்வா, மோர் குழம்பு, கூட்டு உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகளை தயார் செய்கின்றனர். ஆனாலும் இதனையே கண் திருஷ்டி படாமல் காக்கும் ஒரு பொருளாகவும் பார்க்கின்றனர். புதிய வீடு கட்டும் இடங்களில் இதனை கட்டித் தொங்கவிடுகின்றனர். அது மட்டுமின்றி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரும்பாலான இடங்களில், இந்த காயை கத்தியால் கீறி, செந்தூரம் இட்டு சாமி கும்பிட்டு, வீதியில் கொண்டு போய் வீசுவது வழக்கமாக உள்ளது. இதற்காக தற்போது இந்தக்காயின் தேவை அதிகரித்துள்ளது. இவற்றை ஒட்டன்சத்திரம், பழநி, தாராபுரம் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதியில் பல விவசாயிகள் இவற்றை பயிரிட்டுள்ளனர். சேனன்கோட்டை ராஜசேகர் கூறியதாவது: குறைந்த தண்ணீர் இருந்தாலே இதற்கு போதுமானது. ஒரு காய் 3 கிலோவில் இருந்து அதிக பட்சமாக பத்து கிலோ வரை உள்ளது. தற்போது கிலோ ரூ.7 என்ற அளவில் தான் விற்பனையாகிறது. கட்டுப்படியான விலை கிடைத்தால் போதும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar