நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகராஜாகோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், வேளிமலை குமார கோயில் உள்ளிட்ட எட்டு கோயில்களில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. தற்போது தோவாளை கிருஷ்ணசுவாம கோயில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோயில், வெள்ளிமலை முருகன் கோயில் ஆகிய மூன்று கோயில்களில் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. வடிவீஸ்ரம் கோயிலில் இந்த திட்டத்தை முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.