Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரிவரதராஜ பெருமாள் கோயிலில் புதிய ... திருப்பூரில் தீர்த்த கலச ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் கோவிலில் சிறப்பு பூஜை; அன்னதானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2015
12:09

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடைபெற்றன. சதுர்த்தியை ஒட்டி, திருப்பூர் டவுன்ஹால் செல்வ விநாயகர் கோவிலில், நேற்று காலை, 4:00 மணிக்கு, கலச பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், எலுமிச்சை, கரும்பு சாறு, இளநீர், நெல்லி சாறு, பழ வகைகள் உள்ளிட்ட, 16 திரவியங்கள் மூலம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சந்தன காப்பு அலங்காரத்தில், விநாயகர் அருள்பாலித்தார். ஷெரீப் காலனி குறிஞ்சி நகர், சித்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், கசல ஸ்தாபன ஹோமம் நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு, 18 திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சந்தன காப்பு, நவரத்தின அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேவார இன்னிசை, வான வேடிக்கை, மேள தாளம் முழங்க, உற்சவர் வீதி உலா நடைபெற்றது.அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள செல்வ விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மூஞ்சூறு வாகனத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவிநாசி கிழக்கு ரத வீதியில் உள்ள காசி விநாயகர் கோவிலில், சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தன. அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாளக்கரையில் ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் சர்ப விநாயகர் சன்னதியில், கொழுக்கட்டை, எள்ளுருண்டை ஆகியன, நைவேத்யமாக படைக்கப்பட்டன. அவிநாசி காமராஜ் நகர் ஸ்ரீகுழந்தை விநாயகர் கோவில், வ.உ.சி., காலனி தென்முக சித்தர் கணபதி கோவில், சக்தி நகர் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில், தாளக்கரை அண்ணா வீதி பிரசன்ன விநாயகர் கோவில், வள்ளுவர் வீதி ஸ்ரீவில்வ விநாயகர் கோவில் மற்றும் மெயின் ரோட்டில் உள்ள அரச மரத்தடி பிள்ளையார் கோவில் என, அவிநாசி வட்டார விநாயகர் கோவில்களில், சதுர்த்தி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல்லடம்: பல்லடத்தில் உள்ள தண்டபாணி கோவில், அங்காளம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில், ராயர்பாளையம் அம்மன் கோவில், முத்துக்குமாரசாமி மலைக்கோவில், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் உள்ளிட்ட இடங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar