பதிவு செய்த நாள்
19
செப்
2015
02:09
கீழக்கரை: பெரியபட்டினத்தில் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. இங்கு
ஆண்டுதோறும் மதநல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா நடைபெறும். இத்தர்காவின் 114
வது ஆண்டு கொடியேற்றம் (செப்.20) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் பெரியபட்டினம் வீதிகள் வழியாக குதிரைகள், யானை முன்னே செல்ல அலங்கரிக்கப்பட்டதேரில் கொடி ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்க உள்ளனர்.வரும் செப்., 30 இரவு சிறப்பு நிகழ்ச்சிகளும், அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமும் நடைபெறும். மறுநாள் (அக்., 1) அதிகாலை 4 மணியளவில் சந்தனக்கூடு ஊர்வலம் தர்காவை வந்தடையும். அக்., 9 ல் கொடியிறக்கம் செய்யப்பட்டு, அன்னதானம் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் எஸ்.செய்யது இபுராம்சா, துணை தலைவர்கள் சிராஜுதீன், சாகுல்ஹமீது, ஜலால் மீரா ஹமாம், முஜிபுர் ரகுமான், பொருளாளர் ஹபிபு, விழா அமைப்பாளர் அப்துல் மஜீது, ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கபீர் அம்பலம், தொழிலதிபர் சிங்கம் பசீர், ஒன்றியக்கவுன்சிலர் ஹபிபுல்லா, சதக், ரம்லான், பெரியபட்டினம் சுல்தானியா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.