பதிவு செய்த நாள்
22
ஜூலை
2011
11:07
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடக்கிறது. காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி நாளை மூலவர் அருணேஸ்வரரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், குருக்கள் பிரகாஷ், ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர். * தர்மபுரி கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. * தர்மபுரி நெசவாளர் காலனி சௌடேஸ்வரி கோவில், மாரியம்மன் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. * காவேரிப்பட்டணம் ஸ்ரீ வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு ஸ்வாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.