பதிவு செய்த நாள்
22
ஜூலை
2011
11:07
ஓசூர்: ஓசூர் காமராஜ்காலனி போஸ் நகரில், 13 கிராம தேவதைகள் பங்கேற்கும், 7ம் ஆண்டு ஆடிமாத சிறப்பு விழா நாளை 23ம் தேதி நடக்கிறது.விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கோட்டை மாரியம்மன், எல்லம்மாள், மத்தூரம்மாள், அங்கா பரமேஸ்வரி உள்ளிட்ட 13 கிராம தேவதைகள் ஊர்வலமாக போஸ் நகருக்கு எடுத்து வரப்படும். அங்கு கிராம தேவதைகளுக்கு ஆடிமாத சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவையாட்டி, நாளை (ஜூலை 23) காலை 8 மணிக்கு மஞ்சள் நீர் எடுத்துவர புறப்படுதல், 11 மணிக்கு கிராம தேவதைகளை அழைத்து வந்து சிறப்பு பூஜைகள், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜைகள் செய்யப்படுகிறது. இரவு 9 மணிக்கு ஓசூர் நகர முக்கிய வீதிகளில் கிராம தேவதைகள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன. 24ம் தேதி காலை அம்மனுக்கு பொங்கல் வைத்தல், 11.30 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை ஆகியவை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி, அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை, ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சிட்டிஜெகதீஷ், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சந்திரன், அ.தி.மு.க., ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை, போஸ் இளைஞர் மன்றம் மற்றும் விழா குழுவினர் செய்கின்றனர்.