பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் முத்தானந்த சக்தி கோவில் செடல் உற்சவம் இன்று நடக்கிறது.பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் முத்தானந்த சக்தி கோவிலில் செடல் உற்சவம் இன்று(22ம்தேதி) நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாகைவார்த்தல், இரவு 7 மணியளவில் அம்மன் வீதியுலா நடந்தது.இன்று காலை 7 மணிக்கு மூலவர் முத்தானந்த சக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும், செடல் உற்சவமும், அம்மன் வீதியுலா நடக்கிறது. நாளை மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.