திருபுவனை: திருபுவனை மெயின் ரோட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பிற்பகல் அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செய்திருந்தார்.