சிதம்பரம் : சிதம்பரம் வெள்ளந்தாங்கி அம்மன்கோவில் 37ம் ஆண்டு ஆடித் திருவிழா நடந்தது.சிதம்பரம் சபாநாயகர் தெரு வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து வருகிறது.நிறைவு நாள் விழா 26ம் தேதி கரகம், காவடி, செடல் நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு விசேஷ அபிஷேக ஆராதனையும் மதியம் ஒரு மணிக்கு கஞ்சிவார்த்தல், அன்னதானம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது.ஏற்பாடுகளை நிர்வாகி மதியழகன், சிவசங்கர், பழனி, விஜயகுமார் செய்து வருகின்றனர்.