இறைவன் எப்பொழுதும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறான். இது அசைதல் வடிவினது. சக்தியை ஆதாரமாகக் கொண்டே இவ்வசைதல் எல்லாக் காலங்களிலும் நீக்கமற நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த சக்தி 5 வகையாக உள்ளன :
1. பராசக்தி : ஜீவ கோடிகளுக்கு அனுக்கிரகம் செய்ய பரமசிவனுடன் இணைந்து எங்கும் நிறைந்து இருக்கும் அருள்சக்தி 2. ஆதிசக்தி : ஆன்மாக்களுக்கு ஆணவமலம் பக்குவமாகும்படி யோகத்தை கொடுக்கும் மறைத்தல் சக்தி. 3. இச்சா சக்தி : ஆன்மாக்களின் மும்மலங்களை நீக்கி சிவானுபலம் ஏற்பட கருணையே வடிவாக உள்ள ஒடுக்கல் சக்தி 4. ஞான சக்தி : ஆன்மாக்களைக் காக்கும் தொழிலைச் செய்யும் வகையில், சிவானுபவத்தை அடையத் தூண்டும் காக்கும் அறிவு சக்தி. 5. கிரியா சக்தி : ஆன்மாக்களின் வினைகளுக்குத் தக்கவாறு தனு - கரண - புவன - யோகங்களை பெற தேகாதிகளை அளிக்கும் படைத்தல் சக்தி.