பதிவு செய்த நாள்
26
செப்
2015
11:09
நகரி: வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில், 35.74 லட்சம் ரூபாய் ரொக்கம், 190 கிராம் தங்கம், 171 கிலோ வெள்ளியை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காளஹஸ்தி, வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த, 21 நாட்களில், பக்தர்கள் உண்டியல்களில் அளித்த காணிக்கை, கோவில் அதிகாரி ராமிரெட்டி முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், 35,74,012 ரூபாய் ரொக்கம், 190 கிராம் தங்கம், 171 கிலோ வெள்ளி மற்றும் 35 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.