மாகாளியம்மன் கோவிலில் 40 ஆயிரம் எலுமிச்சை பழங்களில் சிறப்பு அலங்காரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2011 11:07
கோவை : ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது; பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடியின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உட்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. பெரியகடை வீதி மாகாளியம்மன் கோவிலில், 40 ஆயிரம் எலுமிச்சை பழங்களில், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குறிச்சி குளக்கரையில் உள்ள பொங்காளியம்மன் கோவிலில், அன்னை இந்திராநகர் குடியிருப்போர் சார்பில், அன்னதானம் செய்யப்பட்டது. ஈச்சனாரி மகாலட்சுமி கோவில், சிட்கோ ஓம்சக்தி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.