Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை 15ம் தேதி திறப்பு: 16ல் ... இன்று.. எல்லா பாவ விளைவுகளும் அழிக்கப்படும் இந்திரா ஏகாதசி! இன்று.. எல்லா பாவ விளைவுகளும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

08 அக்
2015
10:10

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்பிடித்து இழுத்தனர்.

வத்திராயிருப்பும் அதை சுற்றிய கிராமங்கள் செழிப்புடன் இருக்க காரணம் மழைக்கு அதிபதியான முத்தாலம்மன்தான் என்பது இப்பகுதியினர் நம்பிக்கை. அதன் காரணமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஒருவாரம் விழா எடுத்து வழிபடுவார்கள். விழாவின் இறுதிநாளில் தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா செப்.30 ல் கலைவிழாவுடன் துவங்கியது. மண் சிலை காணிக்கை: இயல், இசை, நாடகம் என முப்பெரும் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தன. இறுதி நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 1 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருள ஊஞ்சல் வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க துவங்கினர். பல்வேறு வீதிகள் வழியாக சுற்றிவந்த தேர் மதியம் 1.45 மணிக்கு நிலைக்கு வந்தது. கோயிலில் எழுந்தருளிய அம்மனுக்கு பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றி, மண் சிலை காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

பிரியாவிடை: தொடர்ந்து ஆண்களின் மஞ்சள் நீராட்டு விழா, பறையர்குல மாவிளக்கு வழிபாடு, அம்மன் அருள்வாக்கு வழங்குதல் நடந்தது. அம்மன் முதல்நாள் இரவு தோன்றி மறுநாள் இரவு மறைந்து விடுவார். கோயிலில் இந்த ஒருநாள் மட்டுமே உருவமாய் இருப்பார். விழா முடிந்தவுடன் அம்மனை அன்றைய தினமே ஆற்று நீரில் கரைத்து விடுவார்கள். அதற்காக அம்மனை வழியனுப்பும் "பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. அம்மன் கோயிலை மூன்றுமுறை சுற்றிவந்து பக்தர்களிடம் பிரியாவிடைபெற்றார். ஏராளமான பக்தர்கள் கோயிலை சுற்றி நின்று பூக்களை தூவி அம்மனை வழியனுப்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar