திருவெண்காடர் கோவில் சனி பிரோஷத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2015 12:10
திருநெல்வேலி: கடையம் ஒன்றியம் தட்சிணபுரி என்கிற பார்பன் குளம் அருள்மிகு வாடாகலைநாயகி சமேத திருவெண்காடர் திருக்கோவிலில் வரும் 10ம் தேதி சனிபிரதோஷம் வெகு விமர்சியாக நடக்கிறது. திருநெல்வேலி மாவட்டம், கடையம் ஒன்றியம் தட்சிணபுரி என்கிற பார்பன் குளம் அருள்மிகு வாடாகலைநாயகி சமேத திருவெண்காடர் திருக்கோவிலில் உள்ளது. இங்கு அம்பாள் திருவுருவம் 32 லட்சணங்களும் பொருந்தியிருப்பதுடன், ஆயக்கலைகள் 64 க்கும் தாயாக விளங்குவதாலும், ஈசன் சந்திர காந்த கல்லால் வடிவமைக்கப்பட் சுயம்பாக இருப்பதாலும், சிவனுக்குரிய அனைத்து வழிபாடுகளும் வெகு விமர்சியாக நடப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சிவ பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
வரும் 10ம் தேதி சனிபிரதோஷம் என்பதால் இங்கு ஈசன், அம்பாள் மற்றும் நந்திகேசருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. மேலும் அன்றைய தினம் ஆயிர கணக்கான செண்பகம், மனோரஞ்சிதம் மற்றும் தாமரை மலர்களால் மட்டும் அலங்காரம் செய்கின்றனர். மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 10 ஆயிரத்து எட்டு மாலை 6.00 மணிக்கு தீப ஆராதனையும், 6.30 மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பக்தர்கள் இந்த இனிய சனி பிரதோஷ விழாவில் பங்கேற்று கோவில் திருப்பணி விரைவில் முடிய இறைவனிடம் பிரார்த்திக்க சிவ தொண்டர்கள் மற்றும் ஆன்மிக அமைப்பின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். சனி பிரதோஷ விழாவில் பங்கேற்க விரும்பும் சிவத்தொண்டர்கள் 94864–26872 என்ற கை பேசியில் ராமகிருஷ்ணன் என்ற இளைஞரை தொடர்பு கொண்டு மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.