பதிவு செய்த நாள்
09
அக்
2015
11:10
உடுமலை: உடுமலை ஆனந்தசாயி கோவிலில், நவராத்திரி விழா, அக்.,13ல் துவங்கி, 22 வரை நடக்கிறது. உடுமலை, தில்லை நகரில் அமைந்துள்ளது ஷீரடி ஆனந்தசாயி கோவில். கோவிலில், ஷீரடி சாய்பாபா, 97ம் ஆண்டு மகா சமாதி நினைவு நாள் மற்றும் நவராத்திரி விழா, அக்.,13 இரவு, 7:00 மணிக்கு துவங்குகிறது; 22ம் தேதி வரை, தினமும் இரவு, 7:00 மணி வரை, கோவில் வளாகத்தில் அமைக்கப்படும் கொலு அரங்கின் முன், சிறப்பு பூஜை, ஆரத்தி, பக்தி பாடல்கள் பாடப்படுகிறது. ஷீரடி சாய்பாபாவின் சத்சரிதம் பாராயணம், 20ம் தேதி முதல், 22ம் தேதி வரை, காலை, 10:00 மணி முதல் நடக்கிறது. உடுமலை ஆனந்த சாய் பஜனை குழுவினரின் பஜனை, 21ம் தேதி இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை நடக்கிறது. ஷீரடி சாய்பாபாவின் மகா சமாதி நினைவு தினத்தையொட்டி, 22ம் தேதி காலை, 11:00 முதல் மதியம், 12:30 மணி வரை மற்றும் மதியம், 1:00 முதல் பிற்பகல், 2:30 மணி வரை, சிறப்பு அலங்காரம், நாம சங்கீர்த்தனம், பாராயணம், கூட்டு பிரார்த்தனை, மகா தீபாராதனை நடக்கிறது. இரவு, 7:00 முதல், 7:15 மணி வரை, ஷீரடி ஆனந்த சாய் அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கப்படுகிறது; இரவு, 7:30 முதல் கலை நிகழ்ச்சி நடக்கிறது.