பதிவு செய்த நாள்
09
அக்
2015
11:10
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் நவராத்திரி விழா, அலங்கார ஆராதனை, அன்னதானம் என, ஒன்பது நாட்கள் நடக்க உள்ளது. கருங்கல்பாளையம் பெரியமாரியம்மன் கோவில் நவராத்திரி விழா, வரும், 13ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை, 9 நாட்கள் நடக்கிறது. இந்த ஒன்பது நாட்களும் பெரியமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபி?ஷகம், ஆராதனை நடக்கிறது. விழா நிறைவு நாளான, 22ம் தேதி 108 பால்குடம் ஊர்வலம், சிறப்பு பாலபிஷேகம் நடக்கிறது. விழாவின் முதல் நாளான, 13ம் தேதி காசி அன்னபூரணி அலங்காரத்திலும், 14ம் தேதி நித்ய கல்யாணலட்சுமி, 15ல் மாங்கல்யலட்சுமி, 16ல் சொர்ணலட்சுமி, 17ல் சர்வமங்களலாம்பிகை, 18ல் ருத்ரமாதுர்கா, 19ல் நௌகேசுவரி அம்மன், 20ல் அஷ்டபுஜகாளி, 21ல் ஸ்ரீமகாசரஸ்வதி, 22ல் ஸ்ரீஉலகம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது. தினமும் இரவு, 7 மணிக்கு, கோவிலில் அன்னதானம் நடக்கிறது.