விழுப்புரம்: நவராத்திரியை முன்னிட்டு பெரியதச்சூர் பிரத்தியங்கரா பீடத்தில் உலக நன்மை வேண்டி யாகபூஜைகள் நடக்கிறது. பெரியதச்சூர் பிரத்தியங்கரா பீடத்தில் உலக நன்மை மற்றும் அமைதி வேண்டி யாகபூஜைகள் நடக்கிறது. இதையொட்டி வரும் 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை காலை 10:00 மணிக்கு யாகபூஜைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 13ம் தேதி காலை 8:30 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ ரகுநாதஜீ தலைமையில் நவதுர்கா யாகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரத்தியங்கரா வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.