மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2015 10:10
தளவாய்புரம்: சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா தேரோட்டம் நடந்தது. இக்கோயில் புரட்டாசி பொங்கல் விழா கடந்த 1 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.2,4ம் நாளில் வடகாசியம்மன் வீதி உலா,3,5,6 ம் நாளில் மாரியம்மன் வீதி உலா ,7 ம் நாளன்று மாரியம்மன் பூ சப்பரத்தில் வீதி உலா ,8 ம் நாளில் தண்டியல் சப்பரத்தில் வீதி உலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. ஏ.கே.ஆர் குரூப் சேர்மன்கள் காமராஜ், ராஜ்பிரியம் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.தேர் நான்கு ரத வீதிகள் வழியாக கோயில் வந்தது. பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர் .பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர்,மோர் வழங்கப்பட்டது.மாலையில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனர்.நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடை உறவின்முறை நாட்டாண்மைகள் மற்றும் நிர்வாக குழுவினர் செய்தனர்.