சேத்தூர்: சோலைசேரி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா கடந்த 2 ம் தேதி துவங்கியது.முன்றாம் திருநாளன்று பத்திரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றம் நடந்தது.இதனை தொடர்ந்து மாரியம்மன்,பத்திரகாளியம்மன் பல்வேறு வாகனங்களில வீதி உலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 6ம் திருநாளன்று பக்தர்கள் ஆயிரங்கண் பானை எடுத்தல்,கவுர் குத்தல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று மாலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது.விழா ஏற்பாட்டை உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
*கிருஷ்ணாபுரம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த 2 ம் தேதி துவங்கியது.3 ம் திருநாளன்று பத்திரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றப்பட்டது,மாலையில் குத்து விளக்கு பூஜை நடந்தது.தினசரி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.6 ம் திருநாளன்று மாலையில் கவுர்குத்துதல்,அயிரங்கண் பானை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள் பூ இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று மாலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.விழா ஏற்பாட்டை உறவின் முறை தலைவர் தங்கமாரியப்பன்.தர்மகர்த்தா மலைலிங்கராஜா,கணக்கர் முத்தையா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.