குருவித்துறை கோயில்களில் புரட்டாசி பொங்கல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2015 11:10
குருவித்துறை: குருவித்துறை கிராமத்தினர் சார்பில் முத்தாலம்மன், அங்காள ஈஸ்வரியம்மன், கன்னிமார் கோயில்களில் புரட்டாசி பொங்கல் உற்சவம் 5 நாட்கள் நடந்தது. முதல் நாள் உற்சவத்தில் வைகை ஆற்றில் இருந்து மண்ணில் அம்மனை உருவெடுத்து பக்தர்கள் சுமந்து ஊர்வலமாக கோயில் வர, பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. பூசாரி பல்வேறு அபிஷேக, தீபராதனைகள் செய்ய, பக்தர்கள் பொங்கல் படைத்து அம்மனை பூஜை செய்து அருள்பெற்றனர். நேற்று நுõற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் அக்கினிச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் முøள்பபாரி எடுத்து ஊர்வலமாக வைகை ஆற்றில் கரைத்து பூஜை செய்தனர். மேலக்கால் ஊராட்சி கீழமட்டையானில் அங்காளஈஸ்வரியம்மன், மாரியம்மன் கேயிலில் பாரம்பரிய புரட்டாசி பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு முளைப்பரி எடுத்து, அக்கினிச்சட்டி ஏந்தி கோயில் வந்து அம்மனை தரிசித்தனர். நாடகம்,கலைநிகழ்ச்சிகள் நந்தது. நேற்று கிடாவெட்டி, பொங்கல் படைத்து பக்தர்கள் உடலில் சேற்றை பூசியபடி மாறுவேடத்தில் அம்மனை வழிபட்டனர்.