விருத்தாசலம்:
புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை யொட்டி, ராஜகோ பாலன் அலங்காரத்தில்
பெருமாள் அருள்பாலித்தார்.விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ராஜகோபால
சுவாமி கோவிலில் நேற்று காலை பெருமாள், தாயார், பக்த ஆஞ்சநேயர்,
கருடாழ்வார், தன்வந்திரி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை
4:30 மணியளவில் ராஜகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.