பதிவு செய்த நாள்
16
அக்
2015
11:10
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள குரு கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர் யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான நேற்று, காலை 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ - விஷ்ணு கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. மணவாள நகரில் உள்ள, மங்களீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர்.